தமிழ் முகில்

Tuesday, August 23, 2005

துப்பாக்கி மொழி - புதிய புத்தகம்!

''காஷ்மீர் தொடங்கி, தமிழகம் வரை இந்தியா முழுவதற்குமான பொதுவான பிரச்னைகள் என்று பட்டியலிட்டால் அவற்றுள் முதலாவதாக வரக்கூடியது, தீவிரவாத - பயங்கரவாத இயக்கங்கள்.சுதந்திரம் அடைந்த காலம் தொடங்கி இன்றுவரை தேசத்தின் பல்வேறு மாநிலங்களின் தலையாய தலைவலியாக இருப்பவை இந்தத் தீவிரவாத இயக்கங்கள்.

Image hosted by Photobucket.com

பிரிவினை கோரும் இந்த இயக்கங்களைப் பற்றிய செய்திகள், அவ்வப்போது குண்டுகள் வெடிக்கும்போது மட்டும் தினசரிகளில் வெளியாகும். எப்போதாவது சமரசப் பேச்சுக்கள் நடக்கும். பேச்சு முடியும் முன் மீண்டும் உயிர்ப்பலிகள் தொடங்கிவிடும்.அச்சமூட்டும் ஆள்பலம், மிரளவைக்கும் செயல்திட்டங்கள், கவலை தரத்தக்க வெளிநாட்டுத் தொடர்புகள், பண பலம், ஆயுதபலம் என்று இயங்கும் இத்தகைய இயக்கங்களைப் பற்றிய முழுமையான, விரிவான தகவல்கள் அடங்கிய நூலொன்று தமிழில வெளிவருவது இதுவே முதல் முறை.

அஸ்ஸாம் தொடங்கி, தமிழகம் வரை செயல்படும் பல்வேறு தீவிரவாத இயக்கங்களைப் பற்றிய பல நுணுக்கமான தகவல்கள் இதில் அடங்கியுள்ளன. இவை அனைத்துமே இந்திய மண்ணில் தோன்றி, இங்கேயே செயல்பட்டுக்கொண்டிருக்கும் இயக்கங்கள். இதே காரணத்தால்தான் பாகிஸ்தானில் வேர்கொண்டு செயல்படும் இயக்கங்கள் குறித்த தகவல்கள் இந்நூலில் சேர்க்கப்படவில்லை.''


- இந்தப் புத்தகத்தில் என் நண்பர்களான மருதன், இரா. முத்துக்குமார், ச. ந. கண்ணன் ஆகியோரோடு இணைந்து நானும் பணியாற்றியுள்ளேன். வெளியீடு : கிழக்குப் பதிப்பகம்.

2 Comments:

  • வாங்க வாங்க முகில் "கிழக்கு பதிப்பகம்" பெருஞ்சேவை ஆற்றி வருகிறது. சமீபத்தில் தான் ரஜினிராம்கியின் சகாப்தம்... ரா.கி.ராவின் நாலுமூலை அம்பானி புத்தகங்களைப் படித்தேன். நீங்களும் எழுதியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. படித்து விட்டு விமர்சனம் எழுதுகிறேன் :-))

    By Blogger Ganesh Gopalasubramanian, at Tuesday, August 23, 2005 5:41:00 pm  

  • பயங்கர நமீதா குண்டு பற்றியும் புத்தகத்திலே தீவிரமாக எழுதியிருக்கிறீர்களா?

    By Anonymous Anonymous, at Tuesday, August 23, 2005 9:47:00 pm  

Post a Comment

<< Home