தமிழ் முகில்

Saturday, July 23, 2005

இது.... பாட்டு!

"ஆறரை கோடி பேர்களில் ஒருவன்
அடியேன் தமிழன்
நான் உங்கள் நண்பன்

'அ'னா நீங்கள், 'ஆ'வன்னா நான்தான்!
நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை.

நாம் இருவரும் இணையும் சமயம்
நம் கைகளிலே வரும் இமயம்
.......................................அமையும்
இது அன்பால் இணைந்த இதயம்

என் அன்பே... ஆருயிரே...
என் அன்பே.. ஆருயிர் நீயே!"
Image hosted by Photobucket.com
சமீபத்தில் ரிலீஸ் ஆகியிருக்கும் BF... மன்னிக்கவும்.. 'அஆ' பட பாடல் வரிகள்தான் இவை. பக்கா 'எம்.ஜி.ஆர்.' ஸ்டைல் பாடல், ஆனால் டிஜிட்டல் இசையில்! வாலியின் வரிகள்... ரஹ்மான் குரல்... எஸ்.ஜே. சூர்யாவுக்கு! (......... இட்ட வரிகள் புரியவில்லை. புரிந்தவர்கள் சொல்லவும்.)

கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. இதே பாடல் விஜயகாந்துக்கு கிடைத்திருந்தால் அவர் இதை தன் கட்சி பிரச்சாரப் பாடலாகக்கூட உபயோகிக்கலாம். அது சரி... 'ஆறரை கோடி பேர்களில் ஒருவன்.... அடியேன் தமிழன்...' இந்த வரிகள் யாருக்காகவோ ஸ்பெஷலாக எழுதப்பட்ட மாதிரி தெரிகிறதே! மருத்துவர் அய்யா, உங்களுக்கு புரிகிறதா!

1 Comments:

Post a Comment

<< Home