தமிழ் முகில்

Wednesday, June 15, 2005

தேவை விளக்கம்...

ஒரு பெண். அவளின் இயல்பான நிறம் என்னவென்று தெரியவில்லை. அப்பொழுது கருப்பாக இருந்தாள். அழுக்குப் படிந்து படிந்து அவள் கட்டியிருந்த சீலை(!) முழுவதும் கருப்பாகவே மாறியிருந்தது. அதனால் அவள் சிரித்தபோது உண்மையிலேயே 'மின்னல்' வெட்டினாற்போல் தான் இருந்தது. ஒரு நளினமான நடைபோட்டு ('கேட் வாக்' என்றுகூட சொல்லலாம்) பேருந்து நிறுத்தத்திற்கு வந்தாள். 'ச்சாமிமிஇஇஇ...' என ஒரு விநோதமான குரல்
எழுப்பினாள். கையை வாயிற்கும், வயிற்றிற்கும் இடையே வேகமாக ஆட்டி, பிச்சை கேட்டாள். அந்த இளைஞர் ஒரு நாணயத்தைக் கொடுத்தார். அவரிடமிருந்து நகர்ந்த அவள், வயதான ஒருவரின் அருகில் சென்றாள். அவர் 'போ.. போ..' என விரட்டவே, மீண்டும் அந்த இளைஞரிடமே வந்து
நின்றாள். பழையபடியே யாசிக்க ஆரம்பித்தாள். அந்த இளைஞர் செய்வதறியாது நிற்கவே, 80களில் தமிழ் சினிமா கதாநாயகிகள் பாடல் காட்சிகளில் நடனமாடுவது போல் ஆடத்தொடங்கினாள். அதிர்ந்து போய் அந்த இளைஞன் அங்கிருந்து நகரவே, வேறு சில ஆண்களிடம் ஆரம்பித்தாள். பெண்களின் அருகில் செல்லவே இல்லை. மாறாக தூரத்தில் நின்று அவர்களை திட்டுவது போல் சைகை காட்டினாள். பின் அங்கிருந்து மறைந்தாள்.



சடையாகிப் போன முடி, அடர்ந்து வளர்ந்த தாடி, பல கிழிசல்களுடைய உடை, அவன் தோல்கள் முழுவதும் பல துண்டுத் துணிகள், மிக வேகமாக நடந்து வந்தான். திடீரென்று குனிந்து, தரையிலிருந்து ஒரு துண்டு சிகரெட்டை எடுத்தான். ஸ்டைலாக நின்று, வானை நோக்கி, இல்லாத புகையை விடத் துவங்கினான்.

இப்படி பல மனிதர்களை, மன நலம் சரியில்லாதவர்களை நாம் தினமும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். பார்க்கிறோம். அவர்களிடமிருந்து
விலகி ஓட நினைக்கிறோம். (இதுதான் சராசரி மனித இயல்பு. நான் உட்பட!) கன்னியாகுமரியில் இப்படிப்பட்ட மனிதர்கள் நிறைய அலைவதாக சமீபத்திய வார இதழ்கள், நாளிதழ் செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்களின் நிலை பற்றி அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? ஏர்வாடியில் நடந்த அந்தத் துயரச் சம்பவத்திற்குப் பின் கொஞ்ச காலம் அரசு எந்திரங்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டதுபோல் தெரிந்தது!

இப்படி சமூகத்தில் அவல நிலையில் அலையும் இந்த மனிதர்களுக்காக அரசு தனி காப்பகங்கள் அமைத்தால் என்ன? இதற்காக மனித உரிமைக் கழகங்கள்தான் முழுவீச்சில் குரல் கொடுக்க வேண்டும்.

(இந்தப் பிரச்னை இதுவரை என்னென்ன நடவடிக்கைகள் அரசால் எடுக்கப்பட்டுள்ளன என்று எனக்குத் தெரியவில்லை. இது பற்றி மேலும் விவரமறி
ந்த நபர்கள் பின்னூட்டம் கொடுக்கவும்.)

1 Comments:

  • விலகிப்போகாமல் நாம் எம்மால் முடிந்த உதவியை நிச்சயமாக செய்ய வேண்டும், ஏனில் இந்த கெதி நாளை எமக்குக் கூட வரலாம் இல்லையா...?

    "ஏர்வாடியில் நடந்த அந்தத் துயரச் சம்பவத்திற்குப் பின்..."
    அப்பிடி என்னதான் நடந்தது....?

    By Anonymous Anonymous, at Friday, June 17, 2005 3:14:00 pm  

Post a Comment

<< Home