தமிழ் முகில்

Monday, June 06, 2005

கிளிக்கு ஜோசியம்?!

சென்னை... ஜூன் 3... மாலை 6.35...

மாநகரப் பேருந்து... வழக்கத்திவிட கூட்டம் கம்மிதான்! (ஒருவரின் மூச்சு, மற்றொருவர் மேல் படாதபடி நிற்க முடிந்தது.)

திடீரென பேருந்திற்குள் "..க்கீ ..க்கீ" என கிளி கத்தும் சப்தம்.

"யாரோட கிளிய்யா இது?" ஒருவரின் கேள்வி!

'என்னது, இந்தக் கூட்டத்துல, இந்த இடத்துல கிளியா!' என ஒவ்வொருவரின் பார்வையும் கிளியை நோக்கி பறந்தது.

அதற்குள் கிளியைப் பிடித்திருந்தார் இன்னொருவர்.

பதறியபடியே எழுந்தார் பின் இருக்கையின் ஓரத்தில் அமர்ந்திருந்த அந்த பெரியவர், "கொண்டாங்க, கொண்டாங்க" என கிளியை அவசரமாக வாங்கி,

தன் காலின் கீழிருந்த கூண்டிற்குள் வைத்து அடைத்தார்.

மீண்டும் "..க்க்கீ..க்கீ" சப்தத்துடன் அடங்கிப் போனது கிளி.

70 வயது மதிப்புமிக்க அந்த கிளி ஜோசியக்காரரும் அமைதியானார்.

Image hosted by Photobucket.com

என் மனதில் சில கேள்விகள் பெண்டுலமாகத் தொடங்கின.

கிளி எப்படி தப்பித்தது?

இப்படித் தப்பிப்பதற்காக அது நீண்ட நாள் முயற்சி செய்திருக்குமோ?

இன்று, கூட்டம் குறைவாக இருந்ததால் உயிர் தப்பியது! வழக்கம்போல் அதிகக் கூட்டம் இருந்திருந்தால்... மிதிபட்டே _________!

அப்படியே யார் கண்ணிலும் படாமல் தப்பித்திருந்தாலும், இறக்கை இல்லாத அந்தக் கிளியால் பறக்கக்கூட முடியாதே?

கிளியை இழந்திருந்தால், இந்த வயசில் அந்தப் பெரியவர் பிழைப்புக்கு வேறென்ன செய்வார்?

பிறருடைய வருங்காலத்தை கணிக்க, சீட்டெடுத்துக் கொடுக்கும் அந்தக் கிளி என்றாவது தனக்கு சீட்டெடுத்துப் பார்த்திருக்குமா?

மீண்டும் அதே பேருந்தில், அதே கிளியை, அதே பெரியவரை சந்திப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது. விடை கிடைத்தால் சொல்கிறேன்.

4 Comments:

Post a Comment

<< Home